பொதுத் தேர்வு எழுதாத மாணவர்கள்...!!

பொதுத் தேர்வு எழுதாத மாணவர்கள்...!!

பதினோராம் வகுப்பு தமிழ் மொழி தாள் தேர்வை 12 ஆயிரத்து 660 மாணவர்கள் எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

12ஆம் வகுப்பு பொது தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவர்கள் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற மொழித்தாள் தேர்வில் சுமார் 50 ஆயரத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.  

இந்நிலையில், நேற்று தொடங்கிய பதினோராம் வகுப்பு மொழி தேர்வை 12, 660 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க:   இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் அறிகுறிகளும் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகளும்!!!