” வெற்றி நிச்சயம், வெண்ணிலா சத்தியம்” ; சந்திராயன் - 3 குறித்து வைரமுத்து நெகிழ்ச்சி
சந்திரயான்-3 விண்கலம் குறித்து கவிஞர் வைரமுத்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சந்திரயான்-3 விண்கலம், சுமார் 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலவை நோக்கிய தனது பயணத்தை தொடங்கியது.
இந்த நிலையில், சந்திரயான்-3 விண்கலம் குறித்து கவிஞர் வைரமுத்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சந்திரயான் 3
விண்ணில்
நிலைநிறுத்தப்பட்டதில்
இந்திய விஞ்ஞானிகளை
அண்ணாந்து பார்க்கிறது
அகிலம்
ஆகஸ்ட் 23
அது தடுமாறாமல்
தடம் மாறாமல்
நிலாத் தரையில்
இயங்க வேண்டும்
உலகத்தின் கண்கள்
குவிய வேண்டும்
நிலாவின் மீதும்
இந்தியா மீதும்
வெற்றி நிச்சயம்
வெண்ணிலா சத்தியம்#Chandrayaan3 pic.twitter.com/32B6J8BqRI
— வைரமுத்து (@Vairamuthu) July 15, 2023
அந்தப் பதிவில், ”சந்திரயான் 3 விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதில் இந்திய விஞ்ஞானிகளை அண்ணாந்து பார்க்கிறது அகிலம்”, எனவும் ஆகஸ்ட் 23 அது தடுமாறாமல் தடம் மாறாமல் நிலாத் தரையில் இயங்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதையும் படிக்க | ”1997 ல் தகவல் தொழில்நுட்பக் கொள்கையை உருவாக்கி புரட்சிக்கு வித்திட்டவர் கருணாநிதி” முதலமைச்சர் பெருமிதம்!