தமிழ்நாடு பட்ஜெட் ஈரோடு இடைத்தேர்தலுக்கு பிறகு நடைபெறும் - அப்பாவு அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு பிறகே தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பட்ஜெட் ஈரோடு இடைத்தேர்தலுக்கு பிறகு நடைபெறும் - அப்பாவு அறிவிப்பு

புகைப்படங்கள் நாளேடுகளில் வருமா என காத்திருந்த காலங்கள் உண்டு

சென்னை கிரீம்ஸ் சாலையில் தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்று வரும் புகைப்படக் கண்காட்சியை, தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பார்வையிட்டார். 

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த புகைப்பட கலைஞர்கள் இக்கட்டான சூழலில் எடுத்த புகைப்படங்கள் சமூகத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. புகைப்பட கலைஞர்கள் எடுத்த புகைப்படத்தை இந்த கண்காட்சியில் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க | சூடுபிடிக்கும் அரசியல் களம்... களத்தில் இறங்கும் ஈபிஎஸ்...5 நாட்கள் பிரச்சாரம்.

 புகைப்படங்களை பார்த்த பிறகு பல மலரும் நினைவுகள், என்னுடைய செய்தி குறித்த புகைப்படங்கள் நாளேடுகளில் வருமா என காத்திருந்த காலங்கள் உள்ளது. தற்போது நேரலையாக அடுத்த நொடியில் ஒளிபரப்பு அளவிற்கு பரிணாம வளர்ச்சி ஏற்பட்டுள்ளது  எனவும் நெகிழ்ச்சி மகிழ கூறினார்.

 

பட்ஜெட் குறித்தான கேள்விக்கு பதில்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு பிறகே தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என பதிலளித்து விடைபெற்றார்.