சர்வதேச கிக்பாக்ஸிங் உலககோப்பை தமிழ்நாட்டு மாணவன் தங்கம் வென்று சாதனை!!!

சர்வதேச கிக்பாக்ஸிங் உலககோப்பை தமிழ்நாட்டு மாணவன் தங்கம் வென்று சாதனை!!!


துருக்கி நாட்டில் நடைப்பெற்ற சர்வதேச கிக்பாக்ஸிங் உலககோப்பையில் தமிழ்நாடை சேர்ந்த மாணவன் தங்கம் வென்று சதனை

துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல்லில் மே மாதம் 18 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை  WAKO 8வது சர்வதேச ஓபன் கிக் பாக்ஸிங் உலககோப்பை போட்டி நடைபெற்றது.இதில் இந்தியா உட்பட 42 நாடுகளை சேர்ந்த 3600க்கும் மேற்ப்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.இதில் தமிழகத்தை சேர்ந்த 14 வயதான பரத் விஷ்ணு கலந்துகொண்டு கிக் பாக்ஸிங் அனைத்து சுற்றுகளிலும் வெற்றி பெற்று தங்கபதக்கத்தை வென்று இந்திய நாட்டிற்க்கு பெருமை சேர்த்துள்ளார்.

இதையடுத்து சென்னை வந்த  பரத் விஷ்ணுவை அவரது உறவினர்கள், பெற்றோர்கள் மாலை அணிவித்து உற்ச்சாக வரவேற்ப்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பரத் விஷ்ணு கூறுகையில்,

இதற்க்கு முன்பு பல்வேறு போட்டிகளில் கலந்துகொண் விளையாடியதின் மூலம் சர்வதேச கிக்பாக்ஸிங் உலககோப்பை போட்டியில் தங்கம் பதக்கம் வென்றுள்ளேன்.நான் விளையாடிய அனைத்து போட்டிகளும் மிகவும் கடினமாக இருந்தது. பயிற்சையாளர்கள கொடுத்த ஊக்கத்தினால கடிமையாக போராடி வெற்றி பெற்றுள்ளேன். தமிழக அரசு கிக்பாக்ஸின் பயிற்ச்சிக்கு மைதானங்கள் அமைத்துகொடுக்க வேண்டும்.இதன் மூலம் நிறைய வீரர்கள் தமிழகத்தில் இருந்து உருவாகுவார்கள்விரைவில் விளையாட்டு துறை அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெறுவேன்.இந்தியாவுகா விளையாடுவது எனக்கு கனவாக இருந்தது இப்போது இதன் மூலம் நனவாகி இருக்கிறது.

மேலும் படிக்க | CBSC அங்கீகாரம் பொய்யாக விளம்பரம் - மாணவர் சேர்க்கை - நீதிமன்றத்தில் வழக்கு