4ஜி இணைய சேவையை கைப்பற்றிய டாடா நிறுவனம்...!!

4ஜி இணைய சேவையை கைப்பற்றிய டாடா நிறுவனம்...!!

நாடு முழுவதும் 4ஜி இணையசேவை பயன்பாட்டிற்கான பி. எஸ்.என்.எல்-ன் 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை டாடா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

நாடு முழுவதும் 3ஜி இணைய சேவையை வழங்கி வரும் அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி. எஸ்.என்.எல், நிறுவனமானது 4ஜி மற்றும் 5ஜி சேவையை வழங்கும் பணிகளில் முழுவீச்சில் தற்போது ஈடுபட்டு வருகிறது. தொடர்ந்து 4ஜி சேவைக்காக டி.சி. எஸ் மென்பொருள் நிறுவனத்தை பி. எஸ்.என்.எல் நாடவுள்ளதாக இதற்கு முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.  இந்நிலையில் 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை டாடா நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தற்போது அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:  2000 ரூபாய் நோட்டுகள் மாற்றுவதில் அவசரம் வேண்டாம்... ஆர்பிஐ!!