17வது வனவிலங்கு சரணாலயம்...! அரசாணை வெளியீடு...!

17வது வனவிலங்கு சரணாலயம்...! அரசாணை வெளியீடு...!

ஓசூர் அருகே தமிழகத்தின் 17வது வனவிலங்கு சரணாலயம் அமைக்க உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் 17வது வனவிலங்கு சரணாலயமாக ‘காவிரி தெற்கு வனவிலங்கு சரணாலயத்தை’ அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஓசூர் அருகே 686.406 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான காட்டுப்பகுதி ‘காவிரி தெற்கு காட்டுயிர்  சரணாலயம்’ என்று அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள ஓசூர் கோட்டத்தின் அஞ்செட்டி, ஜவளகிரி, ஊரகம் உள்ளிடக்கிய சரணாலயம் அமைகிறது. தென்னிந்தியாவில் யானைகள் அதிகமாக வசிக்கும் முக்கிய இடங்களில் உள்ளடக்கிய சரணாலயம் அமைக்கப்பட உள்ளது.

குறிப்பாக, 35 வகையான பாலூட்டிகள், 238 வகையான பறவைகள், மென்மையான ஓடுகள் கொண்ட ஆமைகள்,  பூசப்பட்ட நீர்நாய்கள், நான்கு கொம்புகள் கொண்ட மிருகங்கள் உள்ளதால் மாநிலத்தின் வளமான பல்லுயிரியலைப் பாதுகாப்பதற்கு வழிவகுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : நவம்பர் 15....ட்ரம்ப் வெளியிட போகும் முக்கிய அறிவிப்பு!!!