ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை முயற்சி... இருவர் உயிரிழப்பு!!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை முயற்சி... இருவர் உயிரிழப்பு!!

சென்னை வடபழனி திலகர் தெருவில் வசித்து வந்த சித்த மருத்துவர் கங்காதரன்.  அவரது மகள் ஜனப்பிரியா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.  சித்த மருத்துவரின்  மனைவி சாருமதி ஆபத்தான நிலையில் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

முதற்கட்ட தகவலில் கடன் தொல்லையால் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகள் உட்கொண்டதாக தெரிய வருகிறது.  உறவினர்களுக்கு குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள போவதாக குறுஞ்செய்தி அனுப்பி விட்டு தற்கொலை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  சித்த மருத்துவர் கங்காதரனின் மனைவி சாருமதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் விருகம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com