மார்ஸ் பிரொடக்க்ஷன்ஸ் என்ற புதிய படம் நிறுவனம் சார்பில் K.மனோகரன் மற்றும் T.கண்ணன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள ஹாரர் படம் " சைத்ரா ". இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மற்றும் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மணிகண்டன், விஜய லட்சுமி ஆகியோரது வரிகளுக்கு பிரபாகரன் மெய்யப்பன் இசையமைக்கிறார். பொட்டு படத்திற்கு எடிட்டிங் செய்த எலிஷா இந்த படத்திற்கும் பணியாற்றியுள்ளார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி M.ஜெனித்குமார் இயக்கியுள்ளார். இவர் பொட்டு, கா போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர். இந்த படமானது 24 மணிநேரத்தில் நடக்கும் கதையாகும். இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.