கஞ்சா கடத்தி 4 பேர் கைது... நெல்லையில் பரபரப்பு...

நெல்லை மாவட்டம் பணகுடி சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த நான்கு இளைஞர்களை பணகுடி போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கஞ்சா கடத்தி 4 பேர் கைது... நெல்லையில் பரபரப்பு...

நெல்லை | பணகுடி சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக பணகுடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்.இன்ஸ்பெக்டர் ஜமால் மற்றும் போலீசார் பணகுடி புறவழி சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க | புலித்தோலை விற்க முயன்ற 4 பேர் கைது... குமரியில் பரபரப்பு...

அப்போது அந்த வழியாக சந்தேகம்படும்படியாக வந்த 4 இளைஞர்களை மறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது இளைஞர்கள் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருப்பது தெரிய வந்தது.

அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரனையில் பணகுடியை சேர்ந்த அரிகரன் (20), சஞ்சய் (19), முத்து குமார் (20), சபரிராஜன் (19) என தெரியவந்தது. அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து 300 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க | தீபாவளி சீட்டு நடத்தி மோசடி... 4 பேர் கைது...