பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற மைதானத்தில் இயங்கும் தனியார் குத்துச்சண்டை கிளப்புடன் தொடர்புடைய குத்துச்சண்டை பயிற்சியாளர் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 17 வயது குத்துச்சண்டை வீராங்கனை மற்றும் அவரது தாயார் ஆகியோர், அவர் மீது முறையற்ற நடத்தை மற்றும் துன்புறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாயின் புகாரைத் தொடர்ந்து, காவல்துறையினர், 2012 ஆம் ஆண்டின் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (POCSO) சட்டத்தின் 8 மற்றும் 12 பிரிவுகளின் கீழும், 2023 ஆம் ஆண்டின் பாரதிய நியாய சம்ஹிதாவின் (BNS) பிரிவு 351(2) (குற்றவியல் மிரட்டல்) கீழும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் மே 22 அன்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினரினகூற்றுப்படி, அந்தச் சிறுமி கிட்டத்தட்ட பாதுகா ஆண்டுகளாக லயன்ஸ் குத்துச்சண்டை கிளப்பில் பயிற்சி பெற்று வந்திருக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர், அந்த இளம் பெண்ணின் குத்துச்சண்டை பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார். அவர் கடந்த நான்கு ஆண்டுகளாக அந்தச் சிறுமியைத் துன்புறுத்தி வந்ததாகவும், கடந்த ஐந்து முதல் ஆறு மாதங்களாக இந்த சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
முதல் தகவல் அறிக்கையின்படி, காண்டீரவா மைதானத்தில் குற்றம் சாட்டப்பட்டவர், அந்தச் சிறுமியுடன் தகாத உடல்ரீதியான நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள மீண்டும் மீண்டும் முயன்றதோடு, பல சந்தர்ப்பங்களில் அவரைத் தகாத முறையில் தொட்டும் உள்ளார். மே 17 அன்று, குத்துச்சண்டை போட்டி ஒன்றிற்காக அணி சென்னையில் இருந்தபோது நடந்த ஒரு சம்பவம் குறித்து அந்தப் புகாரில் மேலும் விவரிக்கப்பட்டுள்ளது. பயிற்சியாளர் அந்தச் சிறுமியைத் தனது தனி அறைக்கு வரவழைத்து, அங்கு அவளைத் தவறான முறையில் தொட்டும், வலுக்கட்டாயமாக முத்தமிட்டு, தகாத நடத்தையில் ஈடுபட முயன்றதக கூறப்படுகிறது. மேலும், இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தால், அவரைக் கொன்றுவிடுவதாக மிரட்டியும் உள்ளார். மேலும், இந்தத் துன்புறுத்தல் தொடர்பாக குழுவிடமும் ஒரு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் புகார்தாரர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
"குற்றம் சாட்டப்பட்டவர், உடல் உறவு கொள்ளும் நோக்கத்துடன் என் மகளைத் தவறான முறையில் தொட்டு வந்துள்ளார். தனது தனி அறையில் அவளைத் தவறான முறையில் தொட்ட பிறகு, அவர் அவளை திட்டியுள்ளார். பெங்களூருவில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்திலும் அவர் இதேபோல் நடந்து கொண்டார்," என்று சிறுமியின் தாய் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.