மத்தியப் பிரதேச மாநிலத்தில் சத்தர்பூர் மாவட்டத்தில், 42 வயதான நபர் ஒருவர் தனது "அதீத பாலியல் ஆசையை" முடிவுக்குக் கொண்டுவர, கோடரியால் தனது பிறப்புறுப்பை துண்டித்துக் கொண்டார்.
சத்தர்பூர் மாவட்ட தலைமையகத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள மகாராஜ்பூர் பகுதியில், சனிக்கிழமை காலை இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனது கட்டுகடங்காத பாலியல் உணர்ச்சி மற்றும் கோவத்தை கட்டுப்படுத்துவதற்கு, பிறப்புறுப்பை கோடரியால் துண்டித்துள்ளார் ராம் மிலன் யாதவ் என்ற நபர். அவரின் குடும்ப உறுப்பினர்களின் கூற்றுப்படி, இந்த சம்பவத்திற்கு பிறகு பலத்த காயமடைந்த அவரை, தனது உறவினரை உதவிக்கு அழைத்துள்ளார். இந்த சம்பவம் அவரின் வயலில் உள்ள கிணற்றுக்கு அருகே நடந்துள்ளது.
காயமடைந்த பின்னர் ராஜ் மிலன் மகாராஜ்பூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு, அவரது காயத்தின் தீவிரத்தன்மை காரணமாக அவரை மாவட்ட மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
இதற்கு முன், பாதிக்கப்பட்ட ராம் மிலன் ஒரு பத்திரிகையாளரிடம் பேசுவது போன்ற காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், தான் ஒரு ராம் லீலா நாடகக் குழுவை நடத்தி வந்ததாகவும், அதில் காமம் மற்றும் கோபம் போன்ற உணர்ச்சிகளால் அவதிப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். எனவே "எனது பாலியல் ஆசையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று நினைத்தேன். அந்தக் காரணத்திற்காகவே இந்த முடிவை எடுத்தேன். கோடரியால் எனது பிறப்புறுப்புகளை வெட்டிக்கொண்டேன். இப்போது எனது நோக்கம், பிரார்த்தனைகளில் என்னை முழுவதும் அர்ப்பணிப்பதும், தேசத்திற்கு சேவை செய்வதும் மற்றும் நாட்டின் நலனுக்காக உழைப்பதும் தான்" என்று ராம் மிலன் தெரிவித்துள்ளார்.
யாதவின் குடும்பத்தில் அவரது மனைவி, ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர் என்றும், “அவர்களில் ஒருவருக்கு ஜூன் 25 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது” என்றும் யாதவின் உறவினர் தெரிவித்தார். மேலும் அவரின் மனைவி பல வருடங்களாக பக்கவாதத்தால் பதிக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் குடும்பம் மோசமான நிதி நிலைமைக்கு சென்றதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். பலத்த காயமடைந்த ராம் மிலன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இது குறித்து எந்த புகாரும் வராததால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என காவல் துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.