க்ரைம்

வடமாநில இளைஞர்களுக்குள் தகராறு - ஒருவர் உயிரிழப்பு!

Malaimurasu Seithigal TV

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே, வடமாநில இளைஞர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீரானநல்லூர் பகுதியை சேர்ந்த ஹரிதாஸ் என்பவருக்கு சொந்தமான கல் உற்பத்தி செய்யும் இடத்தில், பீகாரை சேர்ந்த 6 இளைஞர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு தீபாவளியை ஒட்டி, 6 பேரும் மது அருந்திய நிலையில், அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் பிரமோத்குமார் சஹானி என்ற இளைஞர் தலையில் இரும்பு ராடால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இது தொடர்பாக இருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.