க்ரைம்

வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, 30 ஆயிரம் ரொக்கம் கொள்ளை...

கிருஷ்ணகிரி மாவட்டம்  ஊத்தங்கரையில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, 30 ஆயிரம் ரொக்கம் கொள்ளைபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

கிருஷ்ணகிரி மாவட்டம்  ஊத்தங்கரையில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, 30 ஆயிரம் ரொக்கம் கொள்ளைபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊத்தங்கரை நாராயண நகரை சேர்ந்தவர் கார்த்திக். இவர் மனைவி மகளுடன் வசித்து வருகிறார். கார்த்திக் வெளிநாட்டில் பணிபுரிந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பியுள்ளார். இந்நிலையில் இவரது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வீட்டை பூட்டி விட்டு  மனைவி மற்றும் குழந்தையுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 20 சவரன் நகைகள் மற்றூம் 30 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கைரேகை நிபுணர்களுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.