பேட்ரிக் சியூபிங், அப்போதைய கிழக்கு ஜெர்மனியில் தனது தங்கை சூசன் கரோலெவ்ஸ்கியுடன் உறவில் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்பத்தில், அவர்களின் தந்தையால் அவன் தாக்கப்பட்டபோது, அந்த உடன்பிறப்புகள் பிரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்னர், தனது சொந்தக் குடும்பத்துடன் மீண்டும் இணைந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, 2000-ம் ஆண்டு டிசம்பரில் அவர்களின் தாய் அனா மேரி இறந்ததைத் தொடர்ந்து, அப்போது 23 வயதான அண்ணன், 16 வயதான சூசனுடன் ஒரே படுக்கையறையைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கியுள்ளார்.
அவர்களின் முறையற்ற மற்றும் சட்டவிரோதமான உறவு, இறுதியில் நான்கு குழந்தைகளின் பிறப்பிற்கு வழிவகுத்துள்ளது. மேலும், அவர்களில் இருவர் மாற்றுத்திறனாளிகள். இந்த ஜோடி முதலில் 2001-ல் ஜெர்மனியின் முறையற்ற உறவுச் சட்டங்களுக்கு எதிராக சட்டரீதியான சவாலை மேற்கொள்ளத்தொடங்கினர். பின்னர் 2012-ல் தங்கள் வழக்கை ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றனர். இந்தக் காலகட்டத்தில்தான் பேட்ரிக், முறையற்ற உறவு தொடர்பான குற்றங்களுக்காக இரண்டு முறை சிறைத் தண்டனை அனுபவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. "தனது சகோதரியுடனான உறவு குறித்து தனக்கு எந்தக் குற்ற உணர்வும் இல்லை" என்று அவர் தெரிவிதிவித்திருந்தார். இந்நிலையில், அவர்களது சொந்த உறவினரான ஒரு பெண், இந்த களங்கத்தை எதிர்க்கும் முயற்சியில் அந்தரங்கப் படங்களைப் பகிர்ந்துள்ளார் .
தனது இரத்த உறவு முறையிலான உறவை நியாயப்படுத்தி, பேட்ரிக் அப்போது, "எங்களுக்குள் நடந்ததைப் பற்றி நாங்கள் குற்றவுணர்ச்சி கொள்ளவில்லை. இரத்த உறவுத் திருமணத்தைக் குற்றமாக்கும் சட்டம் ஒழிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்று வெளிப்படையாக பேசினார். "நான் குடும்பத்தின் தலைவனானேன், என் சகோதரியைப் பாதுகாக்க வேண்டியிருந்தது. அவள் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவள், ஆனாலும் இந்த மிகவும் கடினமான காலகட்டத்தில் நாங்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டோம், இறுதியில் அந்த உறவு உடல்ரீதியானதாக மாறியது," என்று கூறினார்.
தற்போது இறந்துவிட்ட அவர்களது தந்தை, பேட்ரிக்கிற்கு மூன்று வயதாக இருந்தபோது கத்தியால் குத்தியதைத் தொடர்ந்து, அவர் குடும்ப வீட்டிலிருந்து பிரிக்கப்பட்டதால், இருவரும் ஒன்றாக வளரவில்லை என்று வலியுறுத்தி, சூசனும் அவர்களது உறவைப் பாதுகாத்துப் பேசியுள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், "சிறுவயதில் எங்களுக்கு ஒருவரை ஒருவர் தெரியாது, அதனால் இப்போது எங்களுக்கு அதுபோல இல்லை. நாங்கள் வளர்ந்த பிறகு காதலித்தோம், எங்கள் காதல் உண்மையானது. அதைப்பற்றி நாங்கள் எதுவும் செய்ய முடியாது" என்று பேசினார்.
நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் விரும்பினோம், பிறகு இயற்கை எங்களை ஆட்கொண்டது. அது அவ்வளவு எளிமையானது. நாங்கள் வேறு என்ன செய்ய முடியும்? எங்கள் உள்ளுணர்வையும் இதயத்தையும் பின்பற்றினோம். மேலும் சிறைத் தண்டனைகள் இன்றி தம்பதியினர் ஒன்றாக வாழ்வதற்கு நீதிமன்றங்கள் அனுமதிக்க வேண்டும் என அவர்களை இணங்க வைக்கும் முயற்சியில், பேட்ரிக் கருத்தடை அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்.
மேலும், "நாங்கள் ஒருபோதும் தானாக முன்வந்து ஒருவரையொருவர் விட்டுப் பிரிய மாட்டோம் என்பதும் எனக்குத் தெரியும். எங்கள் காதலை யாராவது சந்தேகித்தால், நாங்கள் பிரிக்கப்பட மாட்டோம் என்பதை அவர்கள் பார்த்தாலே போதும்" என்று கூறியுள்ளனர். ஜெர்மனியின் இரத்த உறவுத் தடைச் சட்டம், நாஜி ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டத்திலிருந்து உருவானது. மேலும், இது தற்போது இங்கிலாந்து, பிரான்ஸ், டென்மார்க், ஜிம்பாப்வே மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலும் சட்டவிரோதமாகும். இதற்கு மாறாக, ஆப்கானிஸ்தான், ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நைஜீரியா போன்ற இடங்களில் இச்செயலுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.