கர்நாடக மாநிலம் தர்வாடி அடுத்துள்ள அமினபாவி கிராமத்தை சேர்ந்தவர் ஈரப்பா.இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கமலா என்ற பெண்ணுக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைப் பெற்றுள்ளது. முதலில் கமலாவை நன்றாக பார்த்து கொண்ட ஈரப்பா நாள் போக போக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். எனவே அன்றாட தேவைக்காக கமலா அருகில் உள்ள ஓட்டலில் பணிபுரிந்து வந்துள்ளார்.
ஆனால் ஈரப்பா கமலா கொண்டுவரும் பணத்தையும் அவருக்கு தெரியாமல் எடுத்து குடித்து விட்டு வந்துள்ளார். இந்நிலையில் கமலாவிற்கு அதே பகுதியை சேர்ந்த சபாப்பா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. இரண்டு ஆண்டுகளா தொடர்பில் இருந்து வரும் கமலா பற்றி அவரது கணவர் ஈரப்பாவிற்கு தெரிவந்துள்ளது.
இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற ஈரப்பா இது குறித்து கமலாவிடம் கேட்டு அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் கோபமடைந்த கமலா தனது காதலனுக்கு போன் செய்து “என் கணவனை கொலை பண்ணு என்ன ரொம்ப கொடுமை படுத்துறான்” என கூறியுள்ளார். இதற்கு சபாப்பா மறுப்பு தெரிவித்து கமலுடன் சமாதானமாக பேசியுள்ளார். சமாதானத்தை ஏற்றுக்கொள்ள முடியாத கமலா காதலனை மிரட்டியுள்ளார்.
தனது கணவரை கொலை செய்யா விட்டால் தான் தற்கொலை செய்து கொண்டு இறந்து விடுவேன் என கூறியுள்ளார். இதனால் காதலி மீதிருந்த பாசத்தில் சபாப்பா ஈரப்பாவை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி தனது நண்பரை கூட்டு சேர்த்து கொண்ட சபாப்பா, ஈரப்பா செல்லும் வழக்கமான டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளனர். அங்கு ஈரப்பாவுடன் நட்பாக பழகி அவருக்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்துள்ளனர் பின்னர் வீட்டில் விடுவதாக கூறி தங்களுடன் இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்துள்ளனர்.
அப்போது கான்பேட்டை அருகே பெலகாவில் உள்ள ஒரு பாலத்தின் அருகே ஈரப்பாவை வண்டியை விட்டு இறக்கி சரமறியாக தாக்கியுள்ளனர். மேலும் அங்கிருந்த கட்டை மற்றும் கற்களால் தாக்கி சபாப்பா ஈரப்பாவை கொலை செய்துள்ளார். மறுநாள் காலை ஈரப்பாவின் உடலை பார்த்த அப்பகுதி வழியே சென்ற பொதுமக்கள் போலீசில் புகாரளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஈரப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கமலா தலைமறைவானதால் கமலாவை தேடி விசாரணை மேற்கொண்ட போலீசார் கமலா அளித்த தகவலின் படி அவரது கள்ளக்காதலன் சபாப்பா மற்றும் அவரது நண்பரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கணவனை கள்ளக்காதலன் வைத்து மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.