க்ரைம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் - முதியவருக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்!

Tamil Selvi Selvakumar

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சாத்தூர் ஒத்தையால் கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட மகளிர் காவல்துறையினர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள போக்சோ நீதிமன்றத்தில் குற்றம் தொடர்பான ஆவணங்களை சமர்பித்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி தனசேகரன் சுந்தராஜுக்கு ஆயுள் தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 10 லட்ச ரூபாய் நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிட்டார்.