பண்ருட்டி அடுத்த எஸ் ஏரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானஜோதி. இவர் அதேபகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது.
இதுகுறித்து அந்த பெண்ணின் வீட்டார் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதனையடுத்து ஞானஜோதி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்,.