க்ரைம்

பிரபல ரவுடி மதுரை பாலா கேரளாவில் கைது!

Malaimurasu Seithigal TV

ஏ+ பிரிவு ரௌடியான மதுரை பாலாவை கேரளாவில் வைத்து அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

உட்கார்ந்த இடத்திலேயே ஸ்கெட்ச் போட்டு கொடுத்து கூலிப்படையை ஏவி கொலை செய்து வரும் ஏ ப்ளஸ் வகை ரவுடி மதுரை பாலா. இவர் மீது கொலை ஆள்கடத்தல் உட்பட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிரபல ரவுடி சிவகுமார் உட்பட பல ரவுடிகளுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்து கதையை முடித்தவர் பாலா. 

ஜாமினில் வெளிவந்த ரவுடி மதுரை பாலா வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்து தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக அதித்தீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பெயரில் நேற்று கேரளா மாநிலம் முறிங்கூர் அருகில் வைத்து ரவுடி மதுரை பாலாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.