க்ரைம்

“பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்ட உடல்” - சலூன் கடைக்கு சென்ற வடமாநில தொழிலாளி.. டாஸ்மாக் பின்புறத்தில் இறந்து கிடந்தது ஏன்?

தொடர்ந்து காவல்துறையினர் வடமாநில தொழிலாளி அர்ஜூன் யாதவை..

Mahalakshmi Somasundaram

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் 53 வயதுடைய அர்ஜுன் பிரசாத் யாதவ். இவர் கடந்த சில வருடங்களாக திருச்செந்தூரில் தங்கி அருகே உடன்குடி பகுதியில் உள்ள அனல் மின் நிலைய கட்டுமான பணியில் தனியார் ஒப்பந்த தொழிலாளராக கடந்த இரண்டு வருடமாக பணிபுரிந்து வருகிறார் . இந்நிலையில் நேற்று மாலை குலசேகரபட்டினத்திற்கு சென்று முகசசவரம் செய்து விட்டு வருவதாக தனது நண்பர்களிடம் கூறி விட்டு கிளம்பிச் சென்றுள்ளார்.

மாலை கடைக்கு சென்ற அர்ஜுன் வெகுநேரமாகியும் திரும்பி வராததால் அவரது நண்பர்கள் அர்ஜுனை தேடி வந்துள்ளனர். இதற்கிடையே இரவு 09-மணிக்கு தான் பணியாற்றும் டெக்ஸ் செல் நிறுவனத்தின் அதிகாரியான ஜெகதீசன் என்பவருக்கு செல்போனில் தொடர்பு கொண்ட அர்ஜுன் “தன்னை அடையாளம் தெரியாத சிலர் அடித்து பணம் கேட்பதாகவும் ,செல்போன் பாஸ்வேர்டு கேட்பதாகவும்” இந்தியில் கூறியுள்ளார்.

இதனையடுத்து அவருக்கு ஜெகதீசன் மீண்டும் போன் செய்த போது போன் ஸ்விசாப் என வந்துள்ளது. எனவே குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தொடர்ந்து காவல்துறையினர் வடமாநில தொழிலாளி அர்ஜூன் யாதவை தேடியுள்ளனர். அப்போது போலீசாருக்கு அரசு டாஸ்மாக் கடையின் பின்புறம் கொலை செய்து உடல் பாதி எரிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சடலமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு இறந்து கிடந்தது அர்ஜுன் என்பதனை உறுதி செய்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவம் குறித்து குலசேகரன்பட்டினம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்த நிலையில் குலசேகரன் பட்டினத்தை சேர்ந்த 27 வயதுடைய முத்து செல்வன் மற்றும் நாசரேத் வெள்ளரிக்காய் யூரணியை சேர்ந்த 27 வயதுடைய மூர்த்தி ஆகிய இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.