க்ரைம்

“தலை நசுங்கி இறந்து கிடந்த தொழிலாளி” - இரவு முழுவதும் இரும்புக் கம்பியுடன் திரிந்த வாலிபர்… கொலைக்கு பிளான் போட்ட 15 வயது சிறுமி!

இருவரையும் கண்டித்து காதலை கைவிடுமாறு அறிவுறுத்தியுள்ளார்...

Mahalakshmi Somasundaram

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே காவல்காரன் பட்டியை சேர்ந்தவர் 51 வயதுடைய சிவசுப்ரமணியன். இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ள நிலையில் அப்பகுதியில் சிலிண்டர் விநியோகம் செய்யும் பணியை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். வீட்டிற்கு வெளியில் உள்ள கட்டிலில் படுத்து தூங்குவதை வழக்கமாக வைத்திருந்த சிவசுப்பிரமணியன் கடந்த (ஜன 19) ஆம் தேதி வழக்கம் போல வேலையை முடித்து விட்டு இரவு வீட்டிற்கு வெளியில் இருந்த கட்டிலில் படுத்து உறங்கியுள்ளார்.

மறுநாள் காலை தந்தையை எழுப்ப வந்த மகள் சிவசுப்பிரமணியன் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் மிதந்து உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கத்தி கூச்சல் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உயிரிழந்து கிடந்த சிவ சுப்ரமணியத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி பரிசோதித்த போது சிவசுப்பிரமணியன் கொலை செய்யப்பட்ட போது உடல் முழுவதும் மறைத்து கொண்டு கையில் இரும்பு தம்பியுடன் வாலிபர் அப்பகுதியில் சுற்றி திரிந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் அப்பகுதியை சேர்ந்த 25 வயதுடைய ராதாகிருஷ்ணன் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் கொலைக்கான காரணம் வெளியாகியுள்ளது. ராதாகிருஷ்ண வேறு சமூகத்தை சேர்ந்தவர் என சொல்லப்படும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுமியை காதலித்து வந்திருக்கிறார்.

அந்த சிறுமி உயிரிழந்த சிவசுப்ரமணியனின் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இவர்களின் காதலை அறிந்த சிவசுப்பிரமணியன் இருவரையும் கண்டித்து காதலை கைவிடுமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும் காதலை கைவிடவில்லை என்றால் சிறுமியின் வீட்டில் சொல்லி வேறு விதமாக பிரித்து விடுவேன் என கூறி மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுமி மற்றும் ராதாகிருஷ்ணன் சிவசுப்ரமணியனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி கடந்த (ஜன 19) ஆம் தேதி வீட்டிற்கு வெளியில் உறங்கிய சிவசுப்ரமணியனை ராதாகிருஷ்ணன் அவரது நண்பர்களான சேரன் மற்றும் சிவா நேசன் உதவியுடன் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து ராதாகிருஷ்ணன் மற்றும் கொலைக்கு உதவியாக இருந்த சேரன் மற்றும் சிவநேசனை கைது செய்த போலீசார் கொலைக்கு உடந்தையாக இருந்த 15 வயது சிறுமியிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டிற்கு வெளியில் படுத்து உறங்கிய கூலித் தொழிலாளி காதல் விவகாரத்தில் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.