விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது ஒடுவன் குப்பம் கிராமம் பகுதியை சேர்ந்தவர் 70 வயதுடைய பழனி. இவர் விவசாயம் செய்து வந்த நிலையில் அவரது ஊரின் முன்னாள் அதிமுக கவுன்சிலராக இருந்துள்ளார். பழனிக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி இரண்டு மகன்களை உள்ள நிலையில் மீண்டும் பழனி வேறு ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இரண்டாவது மனைவிக்கும் இரண்டு மகன்கள் உள்ள நிலையில் பயணிக்கும் அவரது இரண்டாவது மனைவியின் மகனான 40 வயதுடைய சந்திரசேகருக்கும் அடிக்கடி சொத்து பிரிப்பது காரணமாகவும் எப்போதும் முதல் தரத்தின் பிள்ளைகளுக்கே அனைத்தையும் கொடுப்பதாகவும் தகராறு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் பழனியின் பூர்வீக சோதனை அதே ஊரில் உள்ள விவசாய நிலத்தை மொத்தமாக தன் பேருக்கு கேட்டுள்ளார் சந்திரசேகர்.
ஆனால் பழனி அனைவருக்கும் சமமாக சொத்து பிரித்து தருவேன். உனக்கு மட்டும் எப்படி நிலத்தை மொத்தமாக கொடுப்பது என நிலத்தை சந்திரசேகர் பெயருக்கு எழுதி தர மறுப்பு தெரிவித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சந்திரசேகர் அவரது தந்தை பழனியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி இன்று ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள நிலத்திற்கு இயற்கையை உபாதை கழிக்க வந்த பழனியை அவரது மகன் சந்திரசேகர் டிராக்டர் ஏற்றி கொலை செய்துள்ளார்.
இதனைப் பார்த்த பொதுமக்கள் கண்டாச்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அறிந்து போலீசார் வருவதற்குள் சந்திரசேகர் டிராக்டருடன் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கண்டாச்சிபுரம் ஆய்வாளர் தலைமையிலான போலீசார், உயிரிழந்த பழனியின் உடலை மீட்டு பிரித பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சம்பவம் நடந்த இடத்தினை விழுப்புரம் உதவி காவல் கண்காணிப்பாளர் ரவீந்திர குமார் குப்தா நேரில் பார்வையிட்டு குற்றவாளியை விரைந்து பிடிக்க போலீசாருக்கு அறிவுறுத்தினார். சொத்து தகராறில் தனது தந்தையே மகனை டிராக்டர் ஏற்றி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.