மாவட்டம்

கழிவறையில் ஆண் குழந்தை உடல் மீட்பு...

சிவகாசி அரசு மருத்துவமனை கழிவறையில் இறந்த நிலையில் ஆண் குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

விருதுநகர் | சிவகாசி அரசு மருத்துவமனை மகப்பேறு சிகிச்சை பிரிவில் உள்ள கழிவறைக்குள் சுமார் 4 மாத ஆண் சிசு கிடந்துள்ளது. மருத்துவமனை பெண் ஊழியர் ஒருவர் பார்த்து செவிலியர்களிடம் தெரிவித்ததை தொடர்ந்து சிசு இறந்த நிலையில் மீட்கப்பட்டது.

யார் சிசுவை கழிவறைக்குள் விட்டுச்சென்றது என்பது குறித்து மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அன்றாடம் நூற்றுக்கணக்கானோர் சிவகாசி அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்கு வந்து செல்லும் நிலையில் மருத்துவமனை கழிவறையில் சிசுவை வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.