மாவட்டம்

ஓட்டம்பிடித்த மாப்பிள்ளை... தாலியுடன் களமிறங்கிய ‘புது’ மாப்பிள்ளை...

திருமண நேரத்தில் திடீரென ஓட்டம் பிடித்த மாப்பிள்ளையை விட்டு, வேறொரு மாப்பிள்ளை உடன் பெண்ணிற்கு திருமணம் நடந்த பரபரப்பு சம்பவம்...

Malaimurasu Seithigal TV

கடலூர் | சிதம்பரம் அருகே வரகூர்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த குருமூர்த்தி என்பவர் மகளுக்கும் கடலூர் அருகே உச்சிமேடு நாடார் தெருவை சேர்ந்த ஜெகநாதன் மாலா இவர்களின் மகன் ஜெயக்குமார், கடலூர் நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் இவருக்கும் ஏற்கனவே பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் இன்று  நடைபெற இருந்தது.

இந்நிலையில் ஜெயக்குமார் நேற்று மணப்பெண்ணுடன் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஃபோட்டோ ஷூட் முடித்து தூங்க சென்றுள்ளனர். காலையில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றபோது, திடீரென ஜெயக்குமார் மண்டபத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

இதனை அறியாமல் ஜெயக்குமாரின் பெற்றோர் உறவினர்கள் மணமகள் பெற்றோர் உறவினர்கள் திருமண ஏற்பாடுகளை செய்து ஜெயக்குமாரை அழைத்து வர சென்றனர். அப்போது ஜெயக்குமார் மண்டபத்தில் இல்லை என்பது தெரியவந்தது.

ஜெயக்குமாரை பல இடங்களில் தேடியும் ஜெயக்குமாரை காணவில்லை என்பதால், மணமகள் பெற்றோர் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் நின்ற நிலையில் மணப் பெண்ணுக்கு வேறொரு மாப்பிள்ளையுடன் உடனடியாக பெண்ணின் பெற்றோர்கள் திருமணத்தை நடத்தி வைத்தனர். திருமண நேரத்தில் நீதித்துறையில் பணியாற்றும் மாப்பிள்ளை ஓட்டம் பிடித்த சம்பவம் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.