திருநெல்வேலி மாநகராட்சியில் 500 க்கும் மேற்பட்ட தூய்மைப்பணியில் வார்டு வாரியாக துய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 8 மாதமாக இவர்களுக்கு தொழிலாளர் வைப்பு நிதி செலுத்தப்படவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே, துய்மை பணிகள் அனைத்தையும் தனியார் வசம் ஒப்படைக்கும் முயற்சிகளை திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியது.
மேலும் படிக்க | தமிழ்நாடு அரசு ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்குக் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்! – சீமான்
இதனை கண்டித்து 300 க்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளர்கள் திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திடிர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது அவர்கள் மாநகராட்சி நுழைவு வாயிலில் ஆணையாளர் வாகனம் முன்பு தரையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.