ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் 32 வயதான லோகேஸ்வரன். இவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொழில் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. லோகேஸ்வரனுக்கும் அதே பகுதியை சேர்ந்த 29 வயதான மருத்துவர் ஜோதிஸ்வரி என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு முன்பு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான மூன்று மாதங்களில் ஜோதிஸ்வரி லோகேஸ்வரனை விட்டு பிரிந்து சென்னைக்கு வந்துள்ளார்.
திருமணமான மூன்று மாதங்களில் தினம் தோறும் குடுத்திட்டு வந்து லோகேஸ்வரன் ஜோதிஸ்வரியை கொடுமைப்படுத்தியதாக சொல்லப்படுகிறது எனவே சென்னைக்கு வந்த ஜோதிஸ்வரி மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். எனவே ராமநாத புறத்தில் தனியாக இருந்த லோகேஸ்வரன் முன்பை விட அதிகமாக மதுவிற்கு அடிமையாக தொடங்கியுள்ளார். அது மட்டுமல்லாமல் டேட்டிங் ஆப் மூலம் பல பெண்களுடன் பழகி அவர்களுடன் நெருக்கமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதனை அறிந்த ஜோதிஸ்வரி இது குறித்து தனது கணவர் லோகேஸ்வரனிடம் கேட்டுள்ளார். இதனால் கணவன் மனைவி இருவரும் தொலைபேசியில் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் சுதந்திர தினத்தில் விடுமுறை என்பதால் ஜோதிஸ்வரி பெருங்களத்தூரில் உள்ள தனது உடன் பிறந்த சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மலை நேரத்தில் மீண்டும் லோகேஸ்வரன் மற்றும் ஜோதிஸ்வரி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட தனது கணவருடன் மூன்று மணி நேரம் போனில் பேசிய ஜோதிஸ்வரி தனது அக்காவின் குடியிருப்பில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜோதிஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் ஜோதிஸ்வரியின் தற்கொலை குறித்து அவரது சகோதரியிடம் விசாரித்த போலீசார் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் லோகேஸ்வரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம் பெண் மருத்துவர் திருமணமான ஒரே வருடத்தில் 13 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.