மாவட்டம்

அரசு ஆரம்ப சுகாதார நிலைய மேற்கூரையில் வழிந்தோடும் மழைநீர்...

கட்டி 6 மாதங்களே ஆன நிலையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மேற்கூரையில் மழைநீர் வழிந்தோடுகிறது.

Malaimurasu Seithigal TV

திருப்பத்தூர் : திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை பகுதியில் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 2016 ஆம் ஆண்டு சுமார் 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு நாளைக்கு சுமார் 200க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் இதான் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தில் உள்ளே மேற்கூரையில் இருந்து மழைநீர் தேங்கி உள்ளே வழியும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறும் முன்னர் இதனை சரி செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு மருத்துவர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.