மாவட்டம்

“சிறுமியை பைக்கில் அழைத்துச் சென்ற காதலன்” - அதிவேக சாகசம்.. அரை நொடியில் முடிந்த மாணவியின் வாழ்க்கை!

இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு..

Mahalakshmi Somasundaram

தென்காசி மாவட்டம், வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி என்ற சிறுமி. இவரும் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்ற வாலிபரும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. சிறுமியும் ரமேஷும் அடிக்கடி இருசக்கர வாகனத்தில் வெளியில் சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். அதே போல நேற்று முன்தினம் சிறுமி தனது காதலன் ரமேஷுடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது ரமேஷ் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டி சென்ற நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிறுமியின் உறவினர்கள் ரமேஷ் மற்றும் அவரது உறவினர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு தரப்பினர் இடையேயும் பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், சிறுமியை பைக்கில் ஏற்றி சென்று விபத்தை ஏற்படுத்தியதால் அந்த சிறுமியை அழைத்துச் சென்ற அவரது காதலன் ரமேஷ் என்பவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி சிறுமியின் உறவினர்கள் செங்கோட்டை காவல் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.செங்கோட்டை காவல் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதுடன் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தென்காசி காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ் இனியன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் வாலிபர் ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வரும் நிலையில் சாலையில் அதிவேகமாக சென்ற பைக் விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.