மலேசியாவில் வேலை செய்த கணவர் திடீர்னு இறந்ததால் அவர் உடலை சொந்த கிராமத்துக்கு கொண்டு வர மனைவி மாவட்ட ஆட்சியர்யிடம் மனு அளித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், படவேடு, ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் குமார். இவர் பொறியியல் பட்டதாரி. இவருக்கும் ரேணுகாவுக்கும் கடந்த ஆறு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சுருதிகா (வயது 7) என்ற மகளும் வேதாந்த் (வயது 4) என்ற மகனும் யாஷிகா (வயது 2) என்ற மகளும் என ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.
விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாததால் சம்பத் குமார் மலேசியாவிற்கு வேலைக்கு சென்று பத்து மாதம் ஆகிறது. இந்நிலையில் திடீரென்று இறந்து விட்டதாக அவரது மனைவி ரேணுகாவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ரேணுகா தனது உறவினர்களுடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் சந்தித்து தனது கணவர் உடலை மீட்டுத் தர மனு அளித்தார்.
அந்த மனுவில், "இறந்த என் கணவரின் உடலை எங்கள் சொந்த கிராமத்துக்கு கொண்டு வர தமிழக அரசும், மாவட்ட நிர்வாகம், நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் "நானும் எனது மூன்று குழந்தைகளும் வாழ்வாதாரின்றி தவித்து வருகிறோம். தமிழக அரசு எங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தனர்.