பொழுதுபோக்கு

சமந்தாவின் விவாகரத்துக்கு குறித்து அவதூறு - மன்னிப்பு கேட்ட மருத்துவர்

சமந்தா நாகசைதன்யா விவாகரத்து குறித்து அவதூறு பரப்பிய மருத்துவர் வெங்கட் ராவ் தனது கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

Malaimurasu Seithigal TV

சமந்தா நாகசைதன்யா விவாகரத்து குறித்து அவதூறு பரப்பிய மருத்துவர் வெங்கட் ராவ் தனது கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

சமந்தாவும், நாக சைதன்யாவும் பிரிவதாக அறிவித்தவுடன் அவர்களது பிரிவுக்கான காரணம் என பல்வேறு வதந்திகள் பரவத் துவங்கியது.

இந்தநிலையில் ஐதராபாத்தை சேர்ந்த மூத்த மருத்துவர் வெங்கட் ராவ் என்பவர் சமந்தாவின் தவறான தொடர்புதான் அவரது விவாகரத்துக்கு காரணம் என பகீர் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார்.

இது சமந்தா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து தன்னைப் பற்றி தவறான தகவல்கள் பகிர்ந்த யூடியூப் சேனல்கள் மீதும், வெங்கட் ராவ் மீதும் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார் சமந்தா.

இந்த நிலையில் சமந்தா தனது பேத்தி போன்றவர் என்றும் சமூக வலைதளங்களில் பரவிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டே அவ்வாறு பேசியதாவும் விளக்கமளித்துள்ளார்.