பொழுதுபோக்கு

கேரள அதிகாரிகளை ஏமாற்றிய மோனலிசா – கணவர் மீது 'POCSO' வழக்கு!

உரிய வயதில்தான் திருமணம் நடந்துள்ளது என்று கூறப்பட்ட நிலையில், மோனாலிசாவிற்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Vinvizhi Leninton

கும்பமேளாவில் ருத்ராட்சைமாலை விற்றுக்கொண்டிருந்த மோனலிசா என்ற பெண்ணை, அங்குவந்த யூட்யூபர் ஒருவர் வீடியோ எடுத்து பதிவேற்றியதில், ஒரே இரவில் வைரலானார் மோனலிசா. அதன் பின்பு அவருக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. இதனிடையில் மார்ச் மாதம் 11 அன்று, அவர் ஃபர்மான் கான் என்பவரை கேரளாவில் உள்ள கோவிலில் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டார். இதனை பலரும் 'லவ் ஜிகாத்' என்று விமர்சித்தனர். இதனையடுத்து தம்பதிகள் இருவரும், பத்திரிகையாளர் சந்திப்பில் இதுகுறித்து விளக்கம் தந்தனர். அதன் பின்பு அவருக்கு திருமணத்திற்கு உரிய வயது இல்லை என்று அவரின் பெற்றோரால் கூறப்பட்ட நிலையில், அது குறித்தும் பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார் மோனலிசா. தனக்கு திருமணத்திற்கு உரிய வயது ஆகிவிட்டது என்று கூறினார். ஆனால் தற்போது அவர் திருமணத்திற்கு குறிப்பிட்ட 18 வயதினை எட்டாதவர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதிகாரப்பூர்வ மருத்துவமனைப் பதிவுகளின் அடிப்படையில், மகேஷ்வரில் உள்ள மருத்துவமனை பதிவுகளின்படி, அவரது பிறந்த தேதி டிசம்பர் 30, 2009 ஆகும். இதன் மூலம், மார்ச் 11, 2026 அன்று நடந்த அவரது திருமணத்தின்போது, ​​அவருக்கு 16 வயதுக்கு சற்று அதிகமாக இருந்திருக்கிறது என்பது தெரிகிறது.

தம்பதியரின் ஆதார் அட்டைகளில் குறிப்பிடப்பட்டிருந்த வயதின் அடிப்படையில்தான் அவர்களின் திருமணம் நடத்தப்பட்டது என்று கோவில் நிர்வாகம் புலனாய்வாளர்களிடம் தெரிவித்தது. அதைத் தொடர்ந்து, விசாரணைக் குழுவால், போலியானது எனக் கண்டறியப்பட்ட ஒரு பிறப்புச் சான்றிதழைப் பயன்படுத்தி, கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் இந்தத் திருமணம் பதிவு செய்யப்பட்டது என்று அவர்கள் கூறியுள்ளனர். மகேஷ்வர் நகராட்சியால் வழங்கப்பட்ட அந்தச் சான்றிதழில், மோனாலிசாவின் பிறந்த தேதி ஜனவரி 1, 2008 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மோசடியான ஆவணத்தை ரத்து செய்யுமாறு ஆணையம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

தற்போது ஃபர்மான் கான் மீது காவல்துறையினரால் போக்ஸோ வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும், கேரளா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களின் காவல்துறை தலைமை இயக்குநர்களையும் ஏப்ரல் 22 அன்று புது தில்லியில் ஆஜராகுமாறு தேசிய பாதுகாப்பு கவுன்சில் (NCST) சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், மூன்று நாட்களுக்கு ஒருமுறை முன்னேற்ற அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறும் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளதுடன், விசாரணையை உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்றும் கூறியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.