பொழுதுபோக்கு

மீண்டு(ம்) வந்த யாஷிகா ஆனந்த்... விபத்திற்கு பிறகு முதன் முறையாக பங்கேற்ற விழா...

விபத்திற்கு பிறகு முதன் முறையாக கடை திறப்பு விழாவில் பங்கேற்றார்.

Malaimurasu Seithigal TV

விபத்திற்கு பிறகு முதன் முறையாக கடை திறப்பு விழாவில் பங்கேற்றுள்ள நடிகை யாஷிகா ஆனந்தின் புகைப்படங்கள், இணையத்தில் லைரலாகி வருகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு கார் விபத்தில் சிக்கிய அவர், மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளார். உடல்நிலை தேறிய நிலையில், சென்னையில் கடை திறப்பு விழாவில் யாஷிகா ஆனந்த் பங்கேற்றுள்ளார்.

அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்களை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். தம்மை சுற்றியிருந்த நெருப்பை விட, தமக்குள் இருந்த நெருப்பு பிரகாசமாக எரிந்ததால் தாம் உயிர் பிழைத்ததாக குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த பிரபலங்கள் பலரும் யாஷிகாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.