பொழுதுபோக்கு

யானைகளை தொந்தரவு செய்த இளைஞர்கள்: ஒருவரை பந்தாடிய யானை- பரபரப்பு வீடியோ  

அசாமில் சாலையை கடந்த யானைகளை பொதுமக்கள் துன்புறுத்தியதால் ஆத்திரமடைந்த ஒரு யானை அங்கிருந்த இளைஞரை மிதித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

அசாமில் சாலையை கடந்த யானைகளை பொதுமக்கள் துன்புறுத்தியதால் ஆத்திரமடைந்த ஒரு யானை அங்கிருந்த இளைஞரை மிதித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் பகுதியில் யானைகள் அதிகம் உள்ள நிலையில் பிரதான சாலையில் யானைக் கூட்டங்கள் சாலையைக் கடந்தன. அப்போது காட்டு யானைகளை 100 க்கும் மேற்பட்டவர்கள் தொந்தரவு செய்த நிலையில் ஆவேசமடைந்த யானை ஓன்று துரத்திச்சென்ற போது அங்கிருந்த இளைஞரைப் பந்தாடியதில் அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இக்காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது