இப்போதெல்லாம் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்ணாடி அணியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். செல்போன் மற்றும் லேப்டாப் பயன்பாடு அதிகரித்திருப்பது ஒரு காரணம் என்றாலும், நம் உணவு முறையில் சத்துக்கள் குறைவதும் கண் பார்வை மங்குவதற்கு முக்கியக் காரணம். உங்கள் கண் பார்வையைத் தெளிவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க சில குறிப்பிட்ட உணவுகளைத் தினமும் சேர்த்துக்கொள்வது அவசியம். இதில் முதன்மையானது கேரட். கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் A கண்களின் பார்வைத் திறனை அதிகரிக்கின்றன.
அடுத்ததாக, கீரை வகைகள் குறிப்பாகப் பொன்னாங்கண்ணிக் கீரை மற்றும் முருங்கைக் கீரை கண் நரம்புகளுக்குப் பலம் தரும். வாரத்திற்கு மூன்று முறை கீரை சாப்பிடுவதால் மாலைக்கண் நோய் போன்ற பாதிப்புகளைத் தவிர்க்கலாம். அதேபோல், மீன் உணவுகளைச் சேர்த்துக்கொள்வது நல்லது. மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கண்களின் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, கண்கள் வறண்டு போவதைத் (Dry Eyes) தடுக்கின்றன. சைவம் சாப்பிடுபவர்கள் பாதாம், வால்நட் போன்ற பருப்பு வகைகளைச் சாப்பிடலாம்.
சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் நெல்லிக்காய் ஆகியவற்றில் வைட்டமின் C நிறைந்துள்ளது. இவை கண்களில் புரை (Cataract) ஏற்படுவதைத் தள்ளிப்போட உதவும். முட்டையின் மஞ்சள் கருவும் கண்களுக்கு மிகவும் நல்லது, அதில் உள்ள லூடின் எனும் சத்து நீல நிற ஒளியிலிருந்து (Blue Light) கண்களைப் பாதுகாக்கிறது.
உணவோடு சேர்த்து, போதிய ஓய்வும் கண்களுக்குத் தேவை. ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை போன் பார்ப்பதைத் தவிர்த்துத் தூரத்திலுள்ள பொருட்களைப் பார்க்க வேண்டும். இரவில் போதுமான அளவு உறங்குவதும் கண்களின் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம். சத்தான உணவுகள் மற்றும் முறையான பராமரிப்பு இருந்தால், கண்பார்வை குறைபாட்டைத் தடுத்துக் கண்ணாடியைத் தூக்கி எறியலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.