மற்றவை

கட்டுப்பாட்டை இழந்த கார்... இரு சக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து...!!!

புதுச்சேரியில்  கட்டுப்பாட்டை இழந்த கார் கடைவீதிக்குள் நுழந்ததில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான இரண்டு சக்கர வாகனங்கள் சேதமடைந்த சம்பவம் பரபர்பபை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

புதுச்சேரியை அடுத்த வில்லியனூரில் பெரம்பையை சேர்ந்த கணேசன் என்பவர் தனது காரை ஓட்டிக்கொண்டு வரும்போது கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. கட்டுப்பாட்டை இழந்த கார் அந்த பகுதியில் இருந்த கடைத்தெருவின் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 க்கும் மேற்ப்பட்ட இரு சக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என கூறப்படுகி்றது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுச்சேரி மேற்கு பகுதி காவல்துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.