பெட்ரோல்-டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, ஜி.எஸ்.டி. வரிமுறை நொறுங்கியுள்ளது என்றும், வேலைவாய்ப்பின்மை உயர்ந்துள்ளது எனவும் கூறியுள்ளார். எரிபொருள் விலை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இன்னும் எந்தெந்த வழிகளில் நாட்டை பா.ஜ.க. கொள்ளையடிக்கும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.