மற்றவை

மழையாய் கொட்டும் பனி... மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்..!

பனியை ரசித்தபடி சாலைகளில் குடை பிடித்து நடந்து செல்லும் மக்கள்...

Malaimurasu Seithigal TV

இமாச்சலப்பிரதேச மாநிலம் மணாலியில் மழையாய் கொட்டும் பனித்துகள்களை கண்டு, அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

மணாலி நகரில் உள்ள மால் சாலையில், மழைபோல் பனி கொட்டி வருகிறது. இதனை அங்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது செல்போனில் படம் பிடித்து, மகிழ்ச்சி அடைந்தனர். 

இதனிடையே, பனிப்பொழிவை பொருட்படுத்தாத மக்கள் சிலர், பனியை ரசித்தபடி சாலைகளில் குடை பிடித்து நடந்து சென்றனர்.