விமான நிலையம் ரத்து செய்ததற்கு விமான நிலையம் பொறுப்பேற்க முடியாது என ராகுல்காந்தி பயணம் தொடர்பான குற்றச்சாட்டிற்கு வாரணாசி விமான நிலையம் பதிலளித்துள்ளது.
வயநாட்டில் இருந்து சென்ற ராகுல்காந்தியின் விமானம், வாரணாசியில் தரையிறக்கம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. குடியரசுத்தலைவர் பயணத்தால், பாதுகாப்பு குளறுபடி ஏற்படும் எனக்கூறி, தரையிறக்கம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், முன்னறிவிப்பின்றி விமானம் வந்தடைந்ததாகவும், நிர்வாகமே அனுமதியை ரத்து செய்ததாகவும், வாரணாசி விமான நிலைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.