delhi blast  
இந்தியா

“3 முறை கேட்ட வெடிச்சத்தம்..” சிதறிக்கிடந்த உடல் பாகங்கள்..! - நெஞ்சை உலுக்கும் டெல்லி குண்டு வெடிப்பு!

மனித உடலின் பாகங்கள் சிதறிக் கிடந்ததாக சம்பவத்தை பார்த்தவர்கள்...

மாலை முரசு செய்தி குழு

நாடு முழுக்க பல நாட்களாக, வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணமே உள்ளன. இதனால் ஆங்காங்கே பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த சூழலில் டெல்லியில் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளதாக  தீயணைப்பு துறை தகவல் தெரிவித்துள்ளது.

  • முன்னதாக ஹரியானாவில் இருந்து 2,900 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

  • டெல்லி செங்கோட்டை அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் வெடிகுண்டு வெடித்ததில் பல வாகனங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளது.

  • மூன்று முறை வெடிச்சத்தம் கேட்டதாக சொல்லப்படுகிறது.

  • உயர் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

  • மனித உடலின் பாகங்கள் சிதறிக் கிடந்ததாக சம்பவத்தை பார்த்தவர்கள் கூறியுள்ளனர். 

  • இதில் தற்போதுவரை 8 -பேர் பலியாகியுள்ளனர். 15 -பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.