பீகாரில் நடப்பாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ( Special Intense Revision) முழு வீச்சோடு தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது. இதில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. இந்த செயல்பாடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் மூலம் பாஜக மக்களின் ஓட்டுக்களை வீணடிக்கிறது. இது முழுக்க முழுக்க அரசியல் சூழ்ச்சி என்ற பல விமர்சனங்கள் எழுந்தன. மேலும் தேர்தல் அறிவித்ததிலிருந்து, மக்கள் நலத்திட்டங்கள் மழை போல பீகாரில் பொழிந்தது.
இந்நிலையில் தான் சில தினங்களுக்கு முன்னர் ராகுல் காந்தி, “மக்களின் வாக்குகளை தேர்தல் ஆணையம் திருடுகிறது. நாங்கள் இந்த குற்றச்சாட்டை சாதாரணமாக சொல்லவில்லை. 100% ஆதாரம் எங்களிடம் உள்ளது. வாக்குகளை தேர்தல் ஆணையத்தின் மூலம் திருடுவது தேசத்துரோகம். மத்தியபிரதேசம் மக்களவை தேர்தலின்போதே எங்களுக்கு சந்தேகம் இருந்தது. மஹாராஷ்டிரா தேர்தலில் எங்கள் சந்தேகம் உறுதியாகி உள்ளது. 6 மாதம் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தி உள்ளோம். அதில் ஒரு அணுகுண்டு கிடைத்துள்ளது. அது வெடித்தால் தேர்தல் ஆணையம் காணாமல் போய்விடும். பாஜகவுக்கு ஆதரவாக யார் இதில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களை விடமாட்டோம்” என பேசியிருந்தார்.
ஆனால் கடந்த 7 -ஆம் தேதி உண்மையிலேயே அவர் அந்த அணுகுண்டை வெடிக்க செய்திருக்கிறார். நேற்று டெல்லியில் உள்ள தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி “தேர்தலுக்கு முன்னர் எப்போதும் கள நிலவரங்களை வைத்து கருது கணிப்பு நடைபெரும், அந்த வகையில் “நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 16 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற எண்ணிக்கை கிடைத்தது. ஆனால், நாங்கள் 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றோம். 7 வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் நாங்கள் தோல்வி அடைந்தோம். இந்த தோல்வி குறித்து நாங்கள் ஆய்வு மேற்கொண்டோம்.
இந்த ஆய்வில், தேர்தல் ஆணையம் பாஜகவுடன் கூட்டு வைத்து மக்களின் வாக்குகளை திருடியிருப்பது தெரியவந்தது. 1. போலி வாக்காளர்கள், 2.போலி முகவரி, 3.ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள், 4.தவறான புகைப்படங்கள், 5.படிவம் 6. தவறாக பயன்படுத்தப்படுவது என 5 விதமாக வாக்குகள் திருடப்பட்டுள்ளன.
கர்நாடகாவின் பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில் , 1,00,250 வாக்குகள் திருடப்பட்டுள்ளது. மகாதேவபுரா தொகுதியில் மட்டும் 11,965 போலி வாக்காளர்கள் தவறான மற்றும் முரணான முகவரியை வைத்து சேர்க்கப்பட்டுள்ளனர். 10,452 வாக்காளர்களுக்கு ஒரே முகவரி, பெங்களூரு மத்திய தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் 40,009 வாக்காளர்களுக்கு போலியான வீட்டு முகவரி இடம்பெற்றுள்ளது. இதில் சிலருடைய வீட்டு முகவரயின் கதவு எண் ‘பூஜ்ஜியம்’ என்றே இருக்கிறது.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி வாக்குகளை யார் திருடுகிறார் என்பது அம்பலமாகி விட்டது. ஒரு தொகுதியில் மட்டும் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டிருந்தால் நாடு முழுவதும் எத்தனை ஆயிரம் வாக்குகள் திருடப்பட்டிருக்கிருக்கும் என யோசித்து பாருங்கள். இந்த விவகாரத்தில் நீதித்துறை தலையிட வேண்டும், ஏனெனில் நாம் மிகவும் நேசிக்கும் ஜனநாயகம் தற்போது நாட்டில் இல்லை” என பேசியிருந்தார்,
இந்நிலையில் உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் மிக முக்கியமான ஒரு தீர்ப்பை வெளியிட்டுள்ளது. இதில் பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட வேண்டும்.வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது இந்திய குடியுரிமைக்கு ஆதாரமாக உள்ள 11 ஆவணங்களில் ஆதாரையும் ஒரு ஆவணமாக தேர்தல் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.