கேரளா மாநிலத்திற்கு இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் சபரிமலை பயணம் மேற்கொள்கின்றனர். இன்னும் சில நாட்களில் சபரிமலை செல்லும் பக்தர்களின் பாத யாத்திரை தொடங்கவுள்ளது. இந்த பயணத்தில் சபரிமலை பக்தர்களுக்கான முறையான வசதிகளை உறுதி செய்யுமாறு திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கும் கொச்சி தேவஸ்தானத்திற்கும் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை சிறப்பு ஆணையரின் மனுவை உயர்நீதிமன்றம் விசாரணை செய்து இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 40 மணி நேரம் இலவச தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர் கூட்டம்...