இந்தியா

இந்தாண்டு பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள்...! தகவல் வெளியிட்ட மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு ...!

Malaimurasu Seithigal TV

தமிழகம் மற்றும் கேரளாவில் இந்தாண்டு மட்டும் 1288 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்புடையதாக வெளிநாட்டவர் 14 பேர் உட்பட 69 பேர் கைது செய்யப்படுள்ளனர். குறிப்பாக தமிழ்நாட்டில் கஞ்சா கடத்தியதாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 677 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆம்பெட்டமைன், மெத்தப்பெட்டமைன், கொக்கைன், எபிட்ரின் உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தியது என மொத்தம்  52 இந்தியர்கள், 8 வெளிநாட்டவர் உட்பட 60 பேரை கைது செய்துள்ளதாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பல்வேறு போதை பொருட்கள் கடத்தியதாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3 இந்தியர்கள் ,6 வெளிநாட்டவர் உட்பட 9 பேரை கைது செய்தனர்.