இந்தியா

" ஒடிசா ரயில் விபத்து விவகாரத்தில் சில தவறுகள் கட்டாயம் இருக்க வேண்டும் " - ஃபரூக் அப்துல்லா.

Malaimurasu Seithigal TV

ஒடிசா ரயில் விபத்து குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளாா். 

இதுகுறித்து அவா் செய்தியாளா்களை சந்தித்து பேசுகையில்:- 

கோரமான இந்த ரயில் விபத்து மிகவும் சோகமான சம்பவமாகும். ஒரு ரயில் விபத்துக்குள்ளானால் மற்ற இரண்டு ரயில்கள் நிறுத்தப்படாமல் போனது எப்படி என கேள்வி எழுப்பினார்.  மேலும், இந்த விவகாரத்தில் ஏதேனும் சில தவறுகள் கட்டாயம் இருக்க வேண்டும் என அவா் குறிப்பிட்டார்.  

தொடா்ந்து பேசிய அவா், இந்த ரயில் விபத்து குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளாா்.