தமிழ்நாடு

தனியார் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்து 2 மாணவர்கள் உயிரிழப்பு.!!

பள்ளியின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

Malaimurasu Seithigal TV

நெல்லை டவுண் செல்லும் சாலையில் உள்ளது சாப்ஃடர் மேல்நிலைப்பள்ளி, இந்த பள்ளியில் இன்று காலை இடைவெளி விடப்பட்ட நேரத்தில் மாணவர்கள் கழிப்பறை சென்றுள்ளனர்,

அப்போது பள்ளி கட்டிடத்தின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து உள்ளது. இதில் 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். 

இதனால் அப்பள்ளி மாணவர்கள் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.