தமிழ்நாடு

தொடரும் அட்டூழியம்!! ஒரே படகில் கடலுக்கு சென்ற 4 மீனவர்களை.. கைது செய்த இலங்கை கடற்படை!!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Suaif Arsath

ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் சிலர், வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு, இன்று காலை மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இந்நிலையில் அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர், ஒரே படகில் சென்ற 4 மீனவர்களை கைது செய்தனர். மீனவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து மீனவர்களை ஊர்க்காவல்துறை துறைமுகத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது மீனவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.