தமிழ்நாடு

எடப்பாடி பழனிச்சாமி  கையில் இனி அதிமுக…! பெரும் பங்கு வகிக்கும் மூன்று மாஜிக்கள்..!

Malaimurasu Seithigal TV

எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் தலைமை பொறுப்பிற்கு வரவேண்டும் எனத் தன் முழு ஈடுபாட்டை கொடுத்து தற்போது வெற்றியை ஈட்டி தந்துள்ளனர் மூன்று மாஜிக்கள்.

எடப்பாடி பழனிசாமி தற்போது அதிமுகவின் பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, இரட்டை தலைமைக்கு முடிவு கட்டும் வகையில் முழு பொறுப்பும் எடப்பாடி பழனிசாமி கையில் வந்துள்ளது.

கடந்த ஆண்டு தொடங்கிய இந்த பிரச்சனைக்கு  தற்போது தான் முடிவு கிடைத்திருக்கிறது. ஓ.பன்னிர் செல்வத்தின் புதிய யூகங்களை கையாளுவதற்கு மிகப்பெரிய தூண்களாக  அந்த மூன்று மாஜிக்கள் செயல்பட்டுள்ளனர்.

இதில் இவர்களின் செயல்பாடு பெரும் பங்கு வகிக்கும் வகையில், கே.பி.முனுசாமி ,  சிவி சண்முகம் , எஸ்.பி.வேலுமணி அதிமுகவில் நடைபெறும் அனைத்து போராட்டங்களில் பங்கேற்று எடப்பாடிக்கு மாபெரும் வெற்றியை தேடித்தந்துள்ளனர்.

 -முருகானந்தம்