தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி பற்றி பாஜக, பாமக, தாமதமாகவே புரிந்து கொண்டுள்ளது- டிடிவி தினகரன்

Tamil Selvi Selvakumar

எடப்பாடி பழனிசாமி பற்றி பாஜக மற்றும் பாமக, தாமதமாகவே புரிந்து கொண்டுள்ளது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில்,  அண்ணாவின் உருவப் படத்திற்கு டிடிவி தினகரன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் தமிழர் என்ற பேச்சு வரவேற்கத்தக்கது எனவும் அப்போது குறிப்பிட்டார்.  

எடப்பாடி பழனிச்சாமி பற்றி மிகவும் தாமதமாக கூட்டணி கட்சிகள் புரிந்து கொண்டதாகவும், முன்னரே இதை உணர்ந்திருந்தால் முறை கேடான ஆட்சியை தடுத்திருக்கலாம் எனவும் தெரிவித்தார்.