தமிழ்நாடு

வெப்பச்சலனம் காரணமாக 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...

வெப்பச்சலனம் காரணமாக கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட  7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Malaimurasu Seithigal TV
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி, கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழையும், டெல்டா மற்றும் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா, தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடல் பகுதிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.