தமிழ்நாடு

மாலையுடன் காத்திருந்த மணப்பெண்.. காதலியுடன் கம்பி நீட்டிய மாப்பிள்ளை...

மணவரையிலிருந்து மாப்பிள்ளை காதலியுடன் தப்பி ஓட்டம் மணப்பெண் மணமேடையில்  நீண்டநேரம் காத்திருந்தது சோகத்தை பெண் மற்றும் பெண் வீட்டாரிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது,

Malaimurasu Seithigal TV

சினிமா பாணியில் தாலி கட்டும்போது  மணப் பெண்ணை தேடுவது போல் இங்கு திருமணம் நேரத்தில் மாப்பிள்ளை காணவில்லை என்றது பரபரப்பை ஏற்படுத்தியது,

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த குமிழி கிராமம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த  உமாபதி , மகாலட்சுமி ஆகியோரின் மகன் சதீஷ்குமார் என்பவருக்கும், செங்கல்பட்டு மெய்யூர் கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு மனைவி நிர்மலா ஆகியோரின் மகள் மணப்பெண் திவ்யா ஆகிய இருவருக்கும் குடும்ப சம்பரதாய படி பெண் பார்த்து கடந்த 5 மாதத்திற்கு முன்பு நிச்சயதார்த்தம் இரு வீட்டார் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

நிச்சயதார்த்தம் முடிந்த நாளிலிருந்து மாப்பிள்ளை சதிஷ்குமார் பெண்ணிடம் சரிவர பேசியதில்லை மணப்பெண் திவ்யா ஃபோன் செய்தாலும் பதிலளிக்காமல் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது,

இதனிடையில் பெண் வீட்டார் மாப்பிள்ளை விட்டாரிடம்  பலமுறை கூறிய சரியான காரணத்தையும் சொல்லாமல் மறைதுள்ளனர். இந்நிலையில் இரு விட்டார் முறைபடை பதிரைக்கை அடித்து அனைத்து உறவினர்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்த பின்னர் நேற்று இரவு திருப்போரூர் அடுத்த கொட்டமேடு பகுதியில் அமைந்துள்ள குமாரசாமி தனியார் திருமண மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடத்தப்பட்டது.

இருவிட்டார் உறவினர்களும் நேற்று இரவு நடைபெற்ற பெண் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாப்பிள்ளை சதேஷ்குமர், மணப்பெண் திவ்யா ஆகியோரை வாழ்த்தி புகைப்படங்கள் எடுக்கப்பட்டது. இந்நிலையில் காலை திருமணத்திற்கு திருமணம் மேடையில் அய்யர் முதல்கொண்டு தாலி, தேங்காய் பூ மழையுடன் காத்திருந்து மணப்பெண்ணை அமரவைத்து சீக்கு நிலங்கு வைத்து மாத்திரம் ஓதினார்.

அப்போது மாப்பிளை அழைத்தபோது மணவரையிலிருந்து மாப்பிள்ளை காணவில்லை என்றதும் சினிமாவில் நடப்பது போல் அனைவரையும் பதரவைத்தது.  பின்னர் அங்குள்ள இடங்களில் மப்பிலையை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். மணப்பெண் தலைகுனிந்து மனமுருக கண்ணீர் வடித்ததால் பெரும் சோகம் ஏற்பட்டது. இதனால் திருமணம் மண்டபத்தில்  பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது,

இது குறித்து திருப்போரூர் காவல் நிலையத்தில் பெண் வீட்டார் புகார் அளித்தனர். மாப்பிள்ளை ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் அதனை  மாப்பிள்ளை வீட்டார் திட்டம் போட்டு மறைத்து வரதற்ச்சனைக்காக எங்களை ஏமாற்றியதாக கூறுகின்றனர்.

இதில் 40 சவரம் தங்க நகை ஏசி, கட்டில், பிரோ, 1.50 லட்சம் மதிப்பில் 125 சிசி.யமகா பைக் உள்ளிட்ட திருமணத்திற்கு தேவையான அனைத்து சாமான்களும் வரதட்சணையாக கொடுத்தும்  ஏமாற்றியதாக புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் திருப்போரூர் போலீசார் சம்பந்தப்பட்ட திருமண மண்டபத்திற்கு சென்று அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.