இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த திட்டங்களுக்கான அரசு மானிய காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அரசு மானிய காசோலையை வழங்கிய முதலமைச்சர் :
சென்னை, தலைமைச் செயலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 88 திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்கு அரசு மானியமாக 3 கோடி ரூபாய் காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதையும் படிக்க : கேரள அரசின் மாநில பட்ஜெட்...கேள்வி எழுப்பிய பி.சிதம்பரம்...!
அதனை தொடர்ந்து, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் தமிழக அரசு இதழில் சார்பில் தயாரிக்கப்பட்ட “இலக்கிய மலர் 2023” என்ற சிறப்பு மலர் -ஐ முதலமைச்சர் வெளியிட்டார்.
அதேபோல் விருதுநகர் மாவட்டம் பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கங்களில் பிரதிநிதிகள் தொழிலாளர் நல வாரியத்திற்கு 5 கோடி ரூபாய்க்கான நிதியினை வழங்கினார்.