கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி முதல் நடந்து வருகிறது. கீழடியில் ஏற்கனவே தங்கத்தில் ஆன பொருள் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது சதுர வடிவிலான சில்வர் நாணயம் கண்டறியப்பட்டுள்ளது. நாணயத்தின் இருபுறமும் சூரியன், நிலவு, விலங்குகள் உருவம் பதிக்கப்பட்டுள்ளது.
முத்திரை நாணயம் போன்ற இந்த நாணயம் பயன்பட்டிருக்க வேண்டும், ஏற்கனவே கீழடி அகழாய்வில் ரோமான்ய எழுத்துகளுடன் கூடிய பானை ஓடுகள் கண்டறியப்பட்டன. வைகை நதியோரம் உள்ள கீழடியில் பண்டைய காலத்தில் வணிகம் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்த நிலையில் இந்த சில்வர் நாணயமும் வணிகத்திற்காக பயன்பட்டிருக்க வேண்டும் என கருதப்படுகிறது.